கவனிக்கவில்லைதான்
சாலையைக் கடக்க முயன்ற அவனும்
அவனைக் கடந்துகொன்ற பேருந்தும்
சற்றுமுன் உயிர்த்திருந்தவன்
ரத்தக்குட்டையில் செருகிக்கிடந்தான்
கூட்ட்ம் கூட்டம்.
எல்லாவற்றுக்கும் சொல்லியனுப்பியிருக்க
உறைந்துகிடந்த ரத்தத்தில் சிக்கிய
ஈக்கள் தவித்துக்கொண்டிருந்தன
அவனது கடைசி மரணத்தின்
பின் தொடர்ச்சியாய் செல்வதைப்போல,,,
காவலுக்கு வந்த காவலர்கள்
டீக்கடையில் டீப்போடச் சொல்லிவிட்டு
பாட்டிலைத் திறந்து எடுத்த
இனிப்பு ரொட்டியைத் தின்றபடி
கண்கள் இறந்துகிடந்தவனின்
ரத்தத்தை தொட்டுக்கொள்வதைப்போல
கூட்டம் மாறிக்கொண்டேயிருந்தது
குறையாது..
மாலைத்தாளின் செய்திக்காக
துடித்துக்கொண்டிருந்தார்கள்
தவிர எதுவுமில்லை அவனது
சாவு குறித்து சொல்வதற்கு..
00000
No comments:
Post a Comment