Sunday, June 10, 2012


           ஜென் இலைகள் 4


 
            உதிர்தலில் கூட
            இணைவானது
            உதிர்தலின் விலகல்
            உறுதிப்படாதவரை,,,

            எல்லாம் உதிர்ந்தபின்
            ஒட்டியிருக்கும்
            நாடியும் நரம்பும்
            உணர்வின் உணர்வின்
            நகல் பிம்பம்,,,

            உதிர்க்கவும் உதிரவும்
            உறுதிப்படுவோம்....

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



          எப்படியிருந்தோம்
          வானின் வாசனையுணர்ந்து
          மேகத்தின் மோகமறிந்து
          காற்றின் புணர்வில்
          களிப்புற்றிருந்தோம்
          விடுபடத்தொடங்கிய சூழலில்
          காற்றேணியில் இறங்கிக்கொண்டு
          கூடிக் களைத்தோம் மண்ணில்
           இனி மண்ணோடு மண்ணாய்
            கரைந்தாலும்
           கிடக்கும்வரை அண்ணாந்து
           அன்னையை மன்றாடுவோம்
           மீண்டும் பிறக்கக் கடவதாக,,,,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


         வீசியெறியப்பட்ட அழுகிய
         பழத்திலிருந்து வெளிப்பட்ட புழு
        நன்றி சொன்னது
        அழுகலின் மரணத்திற்கு
        அஞ்சலி கூறியது
         நகரத்தொடங்கியது
         பூமியின் நுனியில் அழுகலின்
        தொடக்கமாய் ஊர்கிறேனென்று
         எண்ணமுடன்,,,


0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                     எந்த சிறகையும் முறிக்கலாம்
                     முன்னொரு நிபந்தனை
                      அதுபறந்த வெளியினை
                      அளந்து பறக்க வேறொரு
                      சிறகை வரையும் மனத்தை
                      கொடுத்துவிட்டு,,,


00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                   
     




No comments:

Post a Comment