Saturday, August 14, 2010


அதன் இயல்பானது
காத்திருக்கிறது அதற்கான தருணத்தின் பொறுமைக்கும்...
வாழ்தலின் துடிப்பையறியும் அதன் வாழ்விற்கும்...
எப்படியும் அதிகபட்சம் மரணம் வழங்கப்படும்
என்றறியாத அதன் அறியாமைக்கும்...
வயிறு நிறையும் அதே கணத்தின் முடியாத கணத்தில்
சம்பவிக்கும் மரணத்திற்கும்..
யாரும் யாரும் காரணமல்ல பரஸ்பரம்
எனும் கடவுளின் விதியறிந்துவிட்ட
மனத்தோடு
ஆழ்ந்த உறக்கம் தழுவும் வேளையில்
வந்தமரும் அந்த சின்னஞ்சிறு உருவத்திற்கும்
பெயருக்கும் உரிமையான
கொசுவிற்காக
எங்கும் தெரியா போர்வை விலக்கி
சிறிது உடலும் ரத்தமும்
சிறிது உறக்கம் கலைத்தும்....