Sunday, September 12, 2010




கடவுளைக் கண்டேன்
கடவுளைப் பார்த்தேன்
கடவுளைத் தரிசித்தேன்

எது சரி?




வலி மிக வலியானது
மிக அனுபவமானது
மௌனத்தின் தருணத்தில்கூட....





சாலையில் சற்றுமுன் நடந்த
விபத்தின் நேரத்திலிருந்து
என்னைப் பின்னிறுத்தியது எது?




ஒரு துயரத்தின் வாசலை
திறக்கவும் மூடவும்
செய்கிறது அனுபவம்...




கொட்டுகிறது மழை
ரயில் பயணத்தில் இறக்கிவிட்ட
கண்ணாடி சன்னலின் வழியாக
தெரிகிறது தண்டவாளக் குடிசைகளில்
சிம்னிகள் தவம்...
மழையின் ஈரம் முழுக்க
மனத்தில் வழிகிறது..
போகிற போக்கில்
இறங்குகிற சந்திப்பிற்குள்
ஒரு நிமிடம் வேண்டுங்கள்
அந்த சிம்னிக்களுக்காக....